Description
தெய்வத்தமிழ் மந்திரம் என்கின்ற இந்த புத்தகம், பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது. பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் சார்பாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகியலில் வாழ்வதற்கு தேவையான பல பதிகங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, குரு அருள் பெறுதல், திருமணம் நடைபெறுதல், நல்ல குழந்தைகள் பிறத்தல், செல்வச் செழிப்புடன் வாழ்தல் போன்ற பல்வேறு நலன்களுக்கு உரிய பதிகங்கள் இந்த நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த நூலின் பிற்பகுதியில் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சிவபெருமான் மற்றும் உமையம்மைக்கு உரிய வழிபாட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, கோயில் வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் சடங்குகளான திருக்குட நன்னீராட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பாடல்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
வேள்வி, விரதம் மற்றும் உபச்சார வழிபாடுகளுக்குப் பின் முன்னிலைப் பரவுவதற்குரிய சிறப்பான பதிகங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் நெறி வழிபாட்டில் ஆர்வம் கொண்டோர் மற்றும் திருமுறை வழிபாட்டை பரப்ப விரும்புவோர் இந்த புத்தகத்தைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என, தங்கள் பொன்னார் திருவடிகளுக்கு எங்களது பணிவான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றோம்.

Reviews
There are no reviews yet.